Pages - Menu

Thursday, February 19, 2015

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு





தூயநீருக்கான கோரிக்கையை மேற்கொள் கொண்டு பாதிக்க பட்ட மக்களின் ஒன்றியம் கடந்த 08.02.2015 அன்று மேற்கொண்ட கூட்டத்தொடரில் தங்களின் பிரச்சினை தொடர்பில் வடமாகண சபையின் தூய நீருக்கான செயலணி 20.02.2015 இற்கு முன்னதாக மக்களின் பிரச்சினை தொடர்பில் திருப்திகரமான தீர்வுகள் வழங்கப்படாதவிடத்து , வடமாகண சபையின் குடிநீருக்கான செயலணியில் பாதிக்க பட்ட மக்கள் சார்பில் அங்கம் வகிக்கும் பிரதிநிகள் வெளியேறுவர் என்று அறிவித்திருந்தனர்.

இவ்விடயத்தை மேற்கோள் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களினால் 15 அம்ச கோரிக்கை ஒன்றும் சமர்ப்ப்பிக்கப்பட்டது.

மேற்படி பொதுமக்கள் வெளியேறும் பட்சத்திலும் தொடர்ந்து அவர்கள் தங்கள் பிரச்சினைக்கான தீர்வினை நோக்கி நகரும் வழிகளிலும் அவர்களுக்கு விதை குழுமம் ஆதரவினை வழங்கி நிற்கும் .அத்துடன் ஏனைய பொது அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் ஆதரவினை வழங்குமாறு விதை குழுமம் வேண்டிக்கொள்கின்றது.

#விதை குழுமம்





No comments:

Post a Comment