Tuesday, March 17, 2015


கலாசாரங்களுக்கிடையிலான நூல் வெளியீடு
பண்பாட்டுகளுக்கு இடையிலான அறிவை சனநாயகப்படுத்தும் நோக்குடன் இன்று சிங்கள -தமிழ்
தமிழ் -சிங்கள பெயர்ப்பு நூல்கள் இன்று யாழ் பல்கலைகழக நூலக கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டன.
சிட்னி மார்கஸ் டயஸ் (சிங்கள எழுத்தாளர்)
ஹஸ்தி ராஜ அடவிய ( இராஜ யானை வனம் )
மல்சமலைய (பூ வண்ணத்து பூச்சி)
சத்ரு மித்ரு (பிரிவும் உறவும் )
ஆகிய சிறுவர் இலக்கியங்களின் தமிழ் பெயர்ப்பும்
பேராசிரியர் சண்முகலிங்கனின்
சான்றோர் என கேட்ட தாய் ( நுபய் புத்தா உதும்)
என்ற நூலின் சிங்கள பெயர்ப்பும்
வெளியிடப்பட்டன.
இதன் போது கருத்துரைகள் ,இரு மொழி படைப்பாளர்களுக்கு இடையிலான அளவளாவல் கள் என்பன இடம்பெற்றது.
சிட்னி மார்கஸ் டயஸ் இனங்களுக்கு இடையிலான அறிவுபரிமாற்றம் பற்றி கருத்துரைத்தார்.


















ஆயிஷா : கேள்விகள் ; குழந்தைகள் ;நண்பர்கள்
விதைகளில் ஏற்பாட்டில் ஆயிஷா நாவல் பற்றிய குழந்தைகளுடனான உரையாடலின் முதல் நிகழ்வு  யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடை பெற்றது.
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

















Friday, February 27, 2015



”பிறருக்காக சிந்தும் கண்ணீரை விட கொடுக்கும் குருதி மகத்தானது ”
யாழ் இந்துடவுடன் இணைந்து விதைஅமைப்பு மேற்கொள்ளும் இரத்ததான நிகழ்வு எதிர்வரும் 01.03.2015 அன்று இந்துக்கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
மாத ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டு தவிக்க இயலா காரணங்களால் பிற்போடப்பட்ட குருதிக்கொடை நிகழ்வு மீண்டும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்விற்கு குழும அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் வருகைதந்து மனிதத்துவத்தையும் அன்பையும் நிலைப்படுத்துவோம்.
-விதை குழுமம்

Monday, February 23, 2015



எமது உயிருக்கு இணையான  மக்களே ! ,

தாமதிக்கப்படும்  நீதி என்பது மறுக்கப்படும் நீதிக்கு சமனானது. எமது நிலத்தில் நடந்து முடிந்திருக்கும் யுத்தமானது  காலற்றோரையும் ; கையற்றோரையும் ; உறவுகளற்றோரையும் ;உடைமைகளற்றோரையும் கையளித்திருக்கிறது.நாம் நம்பியிருந்த எல்லாவற்றிலும் நம்பிக்கையை இழந்திருக்கும்  காலமிது. 
சூனியத்திலிருந்து எதுவும் பிறப்பதில்லை ஆகவே நாம்  எஞ்சியுள்ள வற்றிலிருந்துதான்  எல்லாவற்றையும் தொடங்க வேண்டியிருக்கிறது
ஆனால்  யார் தொடங்குவது ?
எங்கிருந்து தொடங்குவது ?
நீதியை உண்மையின் வெளிச்சத்தில் நாம் பார்க்க வேண்டும் .

ஆகவே எமதருமை மக்களே !

கிடைக்கவிருக்கும் ஐநா விசாரணை அறிக்கையிலிருந்து  நாம் எதிர்காலத்தில் பயணிப்பதற்கான வரைபடங்களை  கண்டுபிடிக்க முடியும்.ஆனால் அதை பிற்போட்டு வருகின்றன சில சக்திகள்.மக்களான  நமது கோரிக்கையோ அதனை உடனே சமர்ப்பிக்க வேண்டும் என்பதே .

அதை வலியுறுத்தி நாளைய தினம் யாழ்பல்கலைக்கழக சமூகமும்  ,பொது அமைப்புக்களும் ஒரு கண்டன பேரணியை நடத்தவுள்ளன.
இதன் போது நீதியின் வெளிச்சத்தை இதயத்தில் சுமப்பவர்கள் உங்களையும் இணைத்துக் கொண்டு ,ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .

-விதை குழுமம்

Sunday, February 22, 2015




நீ மோட்டர் சைக்கிள எடுத்திட்டு போவன் மச்சான், இல்லை சைக்கிள் என்டா நல்லமடா கதைச்சிட்டே போவம் என்றேன்
ஆனால் உள்ளிக்கிருந்த பயம் இரண்டு வருடங்களாக மோட்டர்சைக்கிள் தொட்டதுமில்ல அதே வேளை லைசன்சுமில்லை, நண்பர்கள் இருவரும் அரைமனதாக சம்மதித்து ஒரே மோட்டார் சைக்கிளில் மூவரும் போவதென்று முடிவாகியது, எந்த தீர்மானமும் இல்லாமல் இடம் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஒரு அசட்டுத்தைரியத்துடன் வெளிக்கிட்டோம் .

 எனது நண்பனுடன் பேசி விட்டு முதலில் அவனது அத்தை வீட்டு கிணற்றை பார்த்துவிட்டு புறப்பட்டோம், மோட்டர் சைக்கிளை எடுத்தபோது அது எனது எல்லையை மீறி பாய்ந்தது, ஒரு நண்பன் குதித்துக்கொண்டான், வேற சைக்கிளென்டா நல்லது என்றான் இதற்கு முந்திய நிகழ்வுகளிலிருந்து வருவோம்,
நண்பனுடன் கதைத்தபோது அவன் அனல் பறக்கபேசினான், அவன் விரக்தியில் இருந்தான், ஒரு நாளைக்கு மூன்டு போத்தில் மினரல் வோட்டர் வாங்கோனுமென்டா எப்படி மச்சான், இவங்கள் சிலர் இத இயக்கம் செய்ததெண்டு சொல்லுறாங்கள் நான் சொல்லுறன் இது இவங்க தாடியளின்ட வேல தான் என்று ஆரம்பித்து அரசியல், அறிவியல் என்ற பல தள உரையாடல்களின் பின் தான் அந்த மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு தயாராகியது , வழி முழுக்க பாதினியம் இது வேற ஒரு சனியன் எத்தின கொமிற்றி போட்டு வெட்டினாலும் வளர்ந்து கொண்டே இருக்கு,
மோட்டார் சைக்கிள் புறப்பட்டது ஏழாலை வடக்கு மெல்ல மெல்ல கடந்தபோது பத்து வீடுகளுக்கு ஒன்று என்டு தண்ணீர் தொட்டிகள் தண்ணீர் தொட்டியை பார்த்தபோது நான் கிரிசாந்தை கூப்பிட்டு' தண்ணி தொட்டி தேடிவந்த கண்ணு குட்டி நான் என்ற பாடலை பாடினேன்' இப்படியே கடந்தபோது
எங்கே இறங்குவது எதை கேட்பது என்ற பிரச்சனை தான் இருந்தது

அப்போது தான் போன் சிணுங்க எடுத்து பார்த்தேன், தெரிஞ்ச அக்காவின்ர கோல் 'எங்கட அத்தவீட்ட சுதுமலையிலயும் எண்ண வந்திட்டாம்' என்டா சரி அங்கயும் போகலாம் என்றபடி நகர்ந்தோம்,இரண்டாவதாக கடை அந்த கடையை கடை என்று சொல்வதை விட ஒரு சுப்பர் மார்கட் என்டு சொல்லலாம், ஆனா நாங்க அங்க வாங்கினது ஒரு தண்ணீர்ப்போத்தல்
குடித்து கொண்டிருந்தபோது ஒரு ஐயா வந்தார் அவர் அந்த இடத்தில் நிக்கும் போது தான் தண்ணீர் பற்றிய பேச்சை தொடக்கினம்.

உண்மையாக அங்கே தண்ணீர் தாங்கிவைந்திருந்த வீடுகள் கொஞ்சம் பொருளாதார நிலையில் சற்று உயர்ந்த வீடுகளாகவே தோன்றியது, கதைத்தபடியே கிரிஷாந்தை அந்த சிறுவர்களை நோக்கி அனுப்பிவிட்டு எங்கள் மோட்டார் சைக்கிள், நான்கு குடிமகன்கள்( அதாவது அற்ககோல் தண்ணி அருந்தியவர்களின்) சபையை அடைந்தது.

இன்னொரு போன் 'மச்சான் பத்திரமா சேர்ந்திட்டியோடா' ஓமடா
குடிமகன்களில் சற்று கறுத்த வில்லன் லுக் அடித்தவர் முதல் ரெரரான லுக்கில இருந்ததாலும், இந்த தண்ணி பற்றி கேட்டதும் வில்லனுக்கே வில்லன் வந்தமாதி அடங்கி பதில் சொன்னார், இதிலிருந்தே விளங்கியது எவ்வளவு பெரிய பிரச்சனையா இது உருமாறி இருக்கெண்டு, அவர் மெல்ல எங்கள உள்ளுக்க கூட்டிக்கொண்டு போய் தொட்டியையும் கிணத்தையும் காட்டினார் மிக அதிகளவான எண்ணெய் செறிவு, யதார்த்தன் கேட்டான்

இத நீங்கள் எப்ப அவதானிச்சனியள் ?

அவதானிக்க எல்லாம் இல்ல தம்பி பிள்ளையளுக்கு பள்ளிக்கூடத்தில சொல்லி விட்டவயாம் , நாங்களும் முதல் நினைச்சம் யாரோ யாரின்டயோ கிணத்துக்குள்ள, ஒயில கலந்து போட்டாங்களென்டு பேப்பரிலயும் இது பெரிய செய்தியா வரேல தானே, பிறகு தான் பக்கத்து வீட்டுக்காரர் சொல்ல தான் விளங்கிச்சு என்டார், இந்த தருணத்தில் கிரிஷாந் அந்த வீட்டுக்கார அம்மாவிடம் கேள்விகளை அடுக்கிகொண்டிருந்ததான்.

நானும் யதார்த்தனும் வெளியே வர அந்த கராச் கூட்டத்தில் ஒரு இருபத்தைந்து மதிக்கத்தக்க வெத்தில போட்டு வாயில் நிரப்பியபடி ஒரு இளைஞன் புதிதாக இணைந்திருந்தான், அடிக்கடி அண்ண என்டு எங்கள கூப்பிட்டார், பரம்பரை பணக்காரனாக இருக்க வேண்டுமென அவரின்ட பேச்சில விளங்கியது ' அண்ண நாங்கள் சின்னவயசில இருந்தே பணத்தில குளிச்சனாங்கள் என்டதால இந்த பணம் என்ன எல்லாம் செய்யுமென்டு எங்களுக்கு தெரியும் , பணமிருந்தா எங்களுக்கு பிடிக்காதவன் வீட்டு கிணத்தில எண்ணைய கலந்து விடலாம் அப்பிடி யாரோ செய்த வேல தான் இது'
அப்ப இங்க வாற தண்ணி உங்களுக்கு காணுமே
'ஒரு நாளைக்கு மூன்டு பவுசரில வருது காணதே குறைய குறைய அடிக்கிறாங்கள்
ஆனா என்னென்டா அண்ண காலமயில அந்த கூட்டத்துக்க நிக்கேலாது, வேணுமெண்டா நாளைக்கு காலம வாங்க
எவ்வளவு கூட்டம் என்டு பாக்கலாம்'
இந்த தண்ணி எங்க இருந்து வருதென்டு தெரியுமே என்டன்
'எங்களுக்கு தெரியாதண்ண வாறாங்கள் அடிக்கிறாங்கள், நாங்கள் வேலைக்கு போறதால இத கவனிக்க நேரமில்ல'
நீங்க கேக்கறத பார்த்தா இனி பவுசர்காரனுக்கு பின்னால எங்கட பொஞ்சாதியள தான் அனுப்போனும் என்டிட்டு நமட்டு சிரிப்பொன்றை விட்டார்.

அண்ண இந்த ஒழுங்கைக்கு போங்கோ நிறய  ஓயில் பாக்கலாம் என்டு, எதிர இருந்த ஒழுங்கய காட்டினார் நாங்கள் மெல்ல இறங்கினம்.அடுத்ததாக போன வீட்டுக்கு முன்னால ஒரு இலந்தை மரம், 'எலந்த பழம் எலந்த பழம் செக்க செவந்த பழம்' என்று பாட ஒரு சிறுவன் வீட்டிலிருந்து எட்டி பார்த்தான்' உனக்கு இந்த பாட்டு தெரியுமே 'இது தேனாட்டம் இனிக்கும் பழம்' ஓம் என்டான்
அம்மா அப்பா நிக்கினமே
'அம்மம்மா அம்மம்மா'
ஒரு அறுபது வயது நிரம்பிய அம்மா வந்தா நாங்கள் இதுக்கு தான் வந்தம் என்றதும்
எங்கள ஒரு ரட்சகர்கள் தேவைதைகளிடம் தமது குறைகளை முறையிடும் மக்களை போல் இடைவிடாது விரக்தி வாசகங்களால் நிரப்பினர், ராங் மிகவும் தூரத்தில இருக்கு எடுத்திட்டு வாறது கஸ்ரம் என்டா அந்த அம்மா, யாருமே இங்க வந்து கவனிக்கல என்டார் ஐயா, ஆனால் அதில் நின்ட இன்னொரு ஐயாவோ
சேர்பக்சல் விளம்பரம் குடுப்பவர் போல 'கற நல்லது' என்ற டயலொக்கின் பகுதி இரண்டாக 'ஓயில் நல்லது' என்ற மாதி பேசிக்கொண்டிருந்தார்
{மூஞ்சிக்கு முன்னால என்ன புகழ்ந்தா பிடிக்காது ' பாஸ் நீங்க விலேஜ் விஞ்ஞானி பாஸ் என நினைக்க தோன்றியது},அடுத்ததாக அப்படியே ஒரு நாயுண்ணிபத்தையை கடந்து ஒரு கோவில் பிரதேசத்தை அடைந்தோம்
அங்கே எதேச்சையாக எனது தூரத்து உறவினரை சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது , அவர்கள் வீட்டில் சிறுவர்களுக்கு கடி சிரங்கு, கொப்பளங்கள் புண்கள் வந்திருந்ததன, அவர்களுடன் பேசிய போது அவர்கள் எங்களுடன் அந்த சிறுவர்களை அனுப்பி வைத்தார்கள் மூன்று சிறுமிகள் இரண்டு சிறுவர்கள், இரண்டு சிறுவர்களுக்கும் கொப்பளம், புண்கள் , ஒரு சிறுவனுக்கு ஆசனவாயில் எல்லாம் கொப்பளம் என தாயார் சொன்னார், அங்கே இன்னொரு அதிசயம் , அங்கே இருந்த சிறுவன் ஒருவனதும் சிறுமி ஒருத்தியினதும் பெயர், ஆதித்தியன் மற்றும் ஆதிரை இது யதார்த்தனுக்கும், கிரிஷாந்துக்கும் என்னை வதைக்கும் நல்ல சந்தர்பமாகியது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் யதார்த்தன் ' இந்த பேரென்ன இரிரேட் பண்ணுது மச்சி' என சொல்லத்தவறவில்லை.இவர்களுக்கு ஒருபடி மேலாக சிறுவர்கள், என்னை வைத்து தமது காமடிகளை நிறைவேற்றினர், சிறுவன் ஆதிக்கு சொல்வதை போல, ஆதி பேசமாட்டியோடா, ஆதி போன நோண்டாத, ஆதி டேய் இப்டி ஒரு விளையாட்டை நடத்தி கொண்டிருந்தனர் முதலாவது ஆதிரை வீட்ட போனம் அங்கயும் ஒயில் பிறகு சிறுவன் ஆதி வீட்ட போனம் அங்கே போகும் வழியில் எனது நண்பிக்கு இந்த படங்களை வைபரில் பதிவேற்றியபடியே சென்றேன் அவர் இது நிறைய பேருக்கு இருந்தா ஒரு மெடிக்கல் காம்ப் அரேஞ் பண்ணலாம் என்றார், பின்னால் வந்த சிறுமிகளோ எங்கள் மூவருக்கும் கொம்பு வைத்தபடி வந்தனர், அதிலும் கிரிஷாந்தன் ஆங்கில பேச்சு பிடிக்கா குட்டிப்பெண்ணோ கொம்பு வைப்பதில் எக்ஸ்பேர்ட் ஆக இருந்தாள், ஆதியின் வீட்டிலும் தாய் தந்தை கு எல்லாம் கொ்பளங்கள், இது என்ன காரணத்தால் ஒருவானது என்று தெரியவில்லை, ஆனால் இது கடந்த இரண்டு மாதங்களாக அதிகமாக இருப்பதாக சொன்னார்கள், திரும்பி வந்து வீட்டின் திண்ணையில் இருந்தோம்,தேநீருக்காக காத்திருந்தோம், மிக அற்புதமான தண்ணியள்ள ஏழாலை யின், தேநீர் கையில் கிடைத்தது, மைலோ தேநீரினுள்ளே குளோரின் வாசம் மிதந்தது ,

'நீர் என்னும் வீட்ட வரலயா' மெசேச் அலறியது
இல்ல யாழ்ப்பாணத்து நீர் இனி பழயமாதி வீட்ட வராது  என ரைப்பண்ணிவிட்டு போனைப் பார்க்கிறேன்

நீருக்குள் விழுந்து டிஸ்பிளே மங்கிய எனது போன் ஸ்கிரீன் மெல்ல அணைகிறது.

#ஆதிபார்த்தீபன்

Saturday, February 21, 2015




01


அன்று சிவராத்திரி .அம்மாவை காலையில் கோவிலில் இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளின் மீது சாய்ந்த வாறு போனை எடுத்து வைபர் அரட்டைகளை  கிண்டத்தொடங்கினேன்  தோழி யொருத்தி  வீடியோ  லிங் ஒன்றை அனுப்பியிருந்தாள்.அது ஒரு தமிழ் குறும்படத்தின் லிங்
“கடவுள்  இருக்கான்  குமாரு ” என்று அதன்  பெயர்  குறிப்பிட்டு இருந்தது .எனக்கு உடனே விடயம் புரிந்தது நேற்றிரவு  “கடவுள்  இல்லையென்று   ”நான் அவளுடன்  நடத்திய விவாதத்திற்கு  வலுச்சேர்க்க அவள் தன்பங்கிறு அனுப்பிய குறும்படம்  அது.நான்  ஏற்கனவே அந்த படத்தை பார்த்திருந்தேன்  அதனால் அவளிற்கு ஒரு ஸ்மைலியை அனுப்பி விட்டு நிமிர திருநீற்றை கொண்ட அம்மாவின் கை என்நெற்றியை  நோக்கி நீண்டது .சட்டென அம்மாவின் கையை பற்றினேன் .அம்மா  அதை எதிர் பார்த்தவளாக என் கையை அநயாசமாக தட்டி விட்டு  நெற்றியை கீறி விட்டாள்
(இப்படித்தான்  அடிக்கடி என் நாத்திகம் அம்மாவிடம்  மிகச்சாதரணமாய் தோற்று போகும் )
 நான் மோட்டார் சைக்கிளை நகர்த்தினேன் .எனக்கொரு பழக்கம் உண்டு காலையில் ஏதாவது ஒரு பாடலோ பிரத்தியேக வார்த்தையோ என்  காதில் வீழ்ந்தால் அன்று முழுவதும் அது மீண்டும் மீண்டும் மனதிலும் பேச்சிலும் வருவதுண்டு.அன்று “கடவுள் இருக்கான்  குமாரு என்ற வார்த்தை  சிக்கி கொண்டது மோட்டார் சைக்கிள்  நகர தொடங்கியது முதல்  அவ்வார்தைகள் எழுந்து வந்தன”
”ஏன்  வேகமா  போற நீ  லைசன்ஸ்  எடுக்காமல்  இருக்கிறது தான் நல்லம் போல  கிடக்கு “
அம்மா இரைந்தாள்.
அம்மா  சுன்னாகம் போகோணும் கிரியும் ஆதியும்  பாத்துக்கொண்டு நிப்பாங்கள் பஸ்க்கு நேரமாச்சு 
”ஏன்  சுன்னாகம் ?”
”அங்க தண்ணி எல்லாம் ஓயில் கலந்த  இடத்தை  பாக்க  போக போறம்”
இன்னும் முறுக்கினேன். வார்த்தைகள் மீண்டும்
   "கடவுள் இருக்கான் குமாரு "


 
02.

தாவடி சந்தியில் மூவரும் பஸ் எடுத்தோம் .ஆதியின் நண்பன்  ஒருவன் மல்லாகம்  வரச்சொல்லி இருந்தான். அவனை துணைக்கு அழைத்து கொண்டு ஓயிலால் பாதிக்க பட்ட இடங்களை பார்க்க போவதாய் திட்டம்.பஸ்சில் சுற்றியிருப்பவர்களை  பற்றி கவனிக்காமல் உரத்த குரலில் மூவரும் அந்த  ஓயில் பிரச்சினை பற்றி விவாதித்த படி வந்தோம்
அப்போது எங்கள் அருகில் இருந்த ஆசனம் ஒன்று காலியாக கிரி அதில் அமர்ந்து கொண்டான்.அவன் பக்கத்தில் இருந்த பெண்மணி ஒருத்தி தான் ஒரு லெக்சர் என அறிமுகப்படுத்தி கொண்டு கிரியுடன் சுன்னாக பிரச்சினை தொடர்பாக கதைக்கத்தொடங்கினார் . நானும் ஆதியும் பின்னால்  சீற் கிடைக்க நழுவி நகர்ந்தோம் .
மல்லாகத்தில் இறங்கும் போது
“என்னவாம் மச்சான்  ஆண்டி சொல்லுறா ?”
“கீரி மலைக்கு போறாவம் ”
“தண்ணி பிரச்சினைக்கு என்ன சொன்னா ?”
”தண்ணி பிரச்சினைக்கும்  தேசியம் தான் தீர்வாம்  ”
“கீரிமலை சிவனிட்ட  தேசியம்  வாங்க போறா போல  ”
சிரித்தே  விட்டோம்.
சரி ஆதி உன்ர நண்பனை கூப்பிடு.
ஆதியின் தோழன் தன் வீட்டு கிணற்றை  காட்டினான். நாங்கள்  மேலும் பாதிக்க பட்ட இடங்களை பார்க்க வேண்டும் என்றோம் தன்னுடைய மோட்டார் சைக்கிள்  ஒன்றையும் சைக்கிள் ஒன்றையும் தந்தான். நானும் ஆதியும் மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டோம்
எங்களிடம் லைசன்ஸ்  இல்லை .ஆனால்  உள்ளே எதுவும்  நடக்காது என்ற  உறுதியான  உள்ளுணார்வு இருந்தது,கிரிஷாந்  சைக்கிளில் முன்னால் கிளம்பி விட்டான்.
ஆதியின் நண்பன்  கண்களில்  பொலீஸ்  பிடித்தால்  என்ன செய்வது என்ற பயம் தெரிந்தது,நான் அவனிடம்  விளையாட்டாய்
கடவுள்  இருக்கான்  குமாரு என்றேன்
ஏழாலை  வீதியில் நுழைந்து இறங்க பொலீஸ் மோட்டார் சைக்கிளொன்று சலனமின்றி கடந்து சென்றது.


03.
அண்ணை  இவடத்த  கிணத்துக்கு  எண்ணையோ ?என்று நானும் ஆதியும் ஒரு இளைஞர் கூட்டத்துடன்  அளவளாவலை  ஆரம்பித்தோம் .கிரிஷாந் கையில் அம்பு வில்லுடன் சென்ற  சின்ன  பையன்களை  சிலரை தொடர்ந்து சென்றுவிட்டான்.
ஓம் தம்பி எல்லா  கிணறும் எண்ணை தான்.எனத்தொடங்கினர் அந்த வாலிபர்கள்.வெளியில் இருந்து கொண்டுவரும் தண்ணீர் போதுமானதாக இல்லை எனறனர்.குளிப்பது ,பாத்திரங்கள்  களுவுவதெல்லாம்  ஓயில் கலந்த தண்ணீரில் தான் என்றனர்.
அப்போது ஒரு வாலிபர்
“தம்பி தீவு பக்கம் போல இங்க ஆகிப்போச்சு. தீவில இருக்கிற சனம்  எங்களை  கிணறு காவியள்  எண்டு நக்கல் அடிக்கிறதுகள் . அப்ப பெருமையா இருக்கும் எங்கட தண்ணிய நினைச்சு .ஆனா  இண்டைக்கு எங்கட  கிணறுகள்  நாசமாய் போச்சு ”
அவர்களுடன் நிற்கும் போது கிரிஷாந்  வந்து சேர்ந்தான் .
அவனுடன்  புறப்பட்டோம் கிரிஷாந் பிந்தொடர்ந்த அம்பு வில் ஏந்திய சிறுவர்களை  கண்டேன் ,அவர்கள்  சிவராத்திரிக்கு கண்ணப்ப நாயனார் நாடகம்  கோவிலில் நடிக்க போவதாய் அவர்கள்  சொன்னார்கள்.அதற்காகவே அம்புகளுடன்  அவர்கள் காணப்பட்டனர்.
அப்போது கோயில் மணியோசை  கேட்டது . ஆதி விளையாட்டாய் சொன்னான் 
அப்ப இண்டைக்கு சிவனுக்கும் ஓயில்  தண்ணிலையோ அபிசேகம் ?
“கடவுள் இருக்கான் கு……”(இடையில் நிறுத்திக்கொண்டேன்)

04.
அவர்கள்  பட்டம் விட்டு கொண்டிருந்தனர்  அவ்ர்களின் பட்டத்தை பக்கத்து தெரு காங்  ஒண்டு கிளிச்சி போட்டார்கள் என்று பிரச்சினை போய் கொண்டிருந்தது. நாங்கள் ஒவ்வொரு வீட்டு படலையையும் திறந்து திறந்து அந்த கிராமத்தின்  உண்மையான நிலத்தினுள் போயிருந்தோம்.அந்த பட்டம்  விட்ட சிறுவர் சிறுமியர் எங்களை  இன்னும் உள்ளே அழைத்து போனார்கள்
அவர்களில் சிலருக்கு கைகளில் ,மற்றும் உடலில் சிரங்கு பிடித்தது போல  புண்கள் .தண்ணீர் நஞ்சாகி அந்த பிஞ்சு தசைகளை பிய்த்திருந்தது.தொடர்ந்தும் அவர்கள் அந்த நீரைத்தான்  பயன்படுத்துவதாய் இயல்பாய் சொன்னார்கள்.
நான் உணர்ச்சி பொங்கி அவர்களுக்கு லெக்சர் எடுத்தேன்.அப்பிடி பயன்படுத்த வேண்டாம்  என்று. அந்த  குழந்தைகள் எங்களை தங்கள் ஊரின் உள்ளே அழைத்து சென்றன்ர், போகும் போது கிரிஷாந்
“டேய் உண்ர்ச்சி வசப்படுற ..உனக்கு அதுதான் பிரச்சினை  நாங்கள் ஒண்டும் இலக்கிய கூட்டத்துக்கோ  பிரச்சாரத்துக்கோ வரேல்ல .இவங்கள் எல்லாம் சாதராணமக்கள்  முதல்ல  அவர்கள் சொல்லுறதை கேள் .பிறகு சாதரணமாய் சொல்லு  விளங்கப்படுத்து .உணர்ச்சி வசப்படாதை ”
எனக்கு கிரிசாந் ஏற்கனவே  நிறையத்தடவை இதை சொல்லி இருக்கிறான் ஆனால் அந்த புண்களை  பார்த்ததும் நான் மீண்டும் முருங்கை மரம் ஏறி விட்டேன்.
எங்கள்  வழிகாட்டிகள் அல்லது தோழர்கள்

05.
இந்த பயணக்குறிப்பில் நான்  உங்களுக்கு கண்டிப்பாய் சொல்ல வேண்டியது  மீனாட்சியை பற்றி.அவள்  ஒரு கிளி.கடைசியாய்  அந்த சிறுவர்கள் எங்களை அழைத்து போன வீட்டில் வளரும் கிளி அவள், ஒரு சிறுமி மீனாட்சியை என் தோள்களில் ஏற்றி விளையாடினாள்.அப்போது தான்  அவள் நான் இறக்கைகளை கவனித்தேன் .பாதி இறக்கைகளை வெட்டி இருந்தார்கள். அப்போது மீனாட்சி தாவிச்சென்று எங்களுடன் வந்த சிறுவனின் கைகளில் இருந்தாள்,அவன் கைகளில் புண்கள்  இருந்தன .நான்  மீனாட்சியின்  வெட்ட பட்ட இறக்கைகளையும் அவன் புண்படர்ந்த கண்களையும் பார்த்தேன். இரண்டும் அருகருகில் இருந்தன.
06.நாங்கள்  புறப்படுவோம் என்று எங்கள்  புதிய தோழர்களிடம் இருந்து விடைபெற்று புறப்பட்டோம்  கிரிஷாந் சைக்கிளை எடுத்து கொண்டான் நானும் ஆதியும் மோட்டார்சைக்கிள். வந்து கொண்டிருக்கும் போது போன் சிணுங்கியது .ஆதியின் நண்பன் .
“டேய் மல்லாகம் சந்தியில் பொலீஸ் நிக்குது  ” நான் பரபரத்தேன்
அதற்குள் ஆதி மல்லாகம் சந்தியில் மோட்டார் சைக்கிளை ஏற்றி விட்டான். முகத்தில் இருவரும் சற்றும் பதட்டம் காட்டவில்லை .பொலீசை கடந்தோம்  நான்
”அப்பாடா “ என்று அசுவாசமடைய  ஆதி சொன்னான்  டேய்  ஒண்டு சொல்ல மறந்திட்டாய் .
என்னடா ?

“கடவுள்  இருக்கான்  குமாரு ”

-யதார்த்தன் -



Subscribe to RSS Feed Follow me on Twitter!