Friday, February 20, 2015


போர்க்குற்ற விசாரணையை துரிதப்படுத்த பல்கலைக் கழக சமூகமும் பொது அமைப்புக்களும் பொது மக்களும் இணைந்து கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று வருகின்ற 24-02-2015 ,அன்று இடம்பெற இருக்கின்றது .இது தொடர்பான பொது அமைப்புக்களுடனான உரையாடல் 19-02-2015 அன்று நடைபெற்றது .இதில் பல்வேறு அமைப்புக்கள் கலந்து தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டன .முடிவில் ,விதை குழுமம் சார்பில் சமர்ப்பிக்க இருக்கும் மகஜரை அதற்கு முன்னரே பொது வெளியில் வைக்குமாறும் ,பொது மக்களின் பார்வைக்கு ஊடகங்கள் மூலம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைக்கப் பட்டது .அது கரிசனத்தில் கொள்ளப்பட்டு பொது அமைப்புக்களுக்கு வருகின்ற ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெற இருக்கும் கூட்டத்தில் காண்பிக்கப்படும் என்று கூறப்பட்டது .இதில் ஏனைய பொது அமைப்புக்களும் சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று விதை குழுமம் பரிந்துரை செய்கிறது .அத்துடன் இந்த பேரணியில் விதை குழுமமும் தனது ஆதரவை அறிவித்திருக்கிறது . .

பேரணி நடக்கும் திகதி - 24 ,செவ்வாய்க் கிழமை
                                நேரம் -10 மணி
                                ஆரம்பிக்கும் இடம் - பல்கலைக் கழக ஆலய முன்றல்
                                முடியும் இடம் -நல்லூர் ஆலயம் .


                                        -விதை குழுமம்

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!