எமது உயிருக்கு இணையான மக்களே ! ,
தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதிக்கு சமனானது. எமது நிலத்தில் நடந்து முடிந்திருக்கும் யுத்தமானது காலற்றோரையும் ; கையற்றோரையும் ; உறவுகளற்றோரையும் ;உடைமைகளற்றோரையும் கையளித்திருக்கிறது.நாம் நம்பியிருந்த எல்லாவற்றிலும் நம்பிக்கையை இழந்திருக்கும் காலமிது.
சூனியத்திலிருந்து எதுவும் பிறப்பதில்லை ஆகவே நாம் எஞ்சியுள்ள வற்றிலிருந்துதான் எல்லாவற்றையும் தொடங்க வேண்டியிருக்கிறது
ஆனால் யார் தொடங்குவது ?
எங்கிருந்து தொடங்குவது ?
நீதியை உண்மையின் வெளிச்சத்தில் நாம் பார்க்க வேண்டும் .
ஆகவே எமதருமை மக்களே !
கிடைக்கவிருக்கும் ஐநா விசாரணை அறிக்கையிலிருந்து நாம் எதிர்காலத்தில் பயணிப்பதற்கான வரைபடங்களை கண்டுபிடிக்க முடியும்.ஆனால் அதை பிற்போட்டு வருகின்றன சில சக்திகள்.மக்களான நமது கோரிக்கையோ அதனை உடனே சமர்ப்பிக்க வேண்டும் என்பதே .
அதை வலியுறுத்தி நாளைய தினம் யாழ்பல்கலைக்கழக சமூகமும் ,பொது அமைப்புக்களும் ஒரு கண்டன பேரணியை நடத்தவுள்ளன.
இதன் போது நீதியின் வெளிச்சத்தை இதயத்தில் சுமப்பவர்கள் உங்களையும் இணைத்துக் கொண்டு ,ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
-விதை குழுமம்
No comments:
Post a Comment