Tuesday, February 10, 2015




இத்தால் அனைவருக்கும் அறியத்தருவது என்னவென்றால் ,வருகின்ற பெப்ரவரி 14 இடம்பெற இருந்த காதலர் தின நிகழ்வான " கவிதை - காதல் -இசை " ( கவிதையாடல் என முன்னர் பெயரிடப்படது ) நிறுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது  .காரணம் , யாழ்ப்பாணம் நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பான பிரச்சினை தான் ,நாம் எதிர் பார்த்ததை விட பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள இந்த பிரச்சினையை ,விஞ்ஞான ரீதியாகவும் புலமை ரீதியாகவும் கையாளுவதே சரியானது .இது தொடர்பான விழிப்புணர்வு புலமை சார் தளத்திலும் செயல் சார் தளத்திலும் ஏற்ப்பட வேண்டும் .அதை  தூண்டவும் துரிதப்படுத்தவும் இந்த திறந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்கிறோம் ,அனைத்து செயற்ப்பாட்டாளர்கள் ,சமூக ஆர்வலர்கள் , கலைஞர்கள் , எழுத்தாளர்களையும் இந் நிகழ்வில் கலந்து  கொண்டு தமது அவதானிப்புகளையும் கருத்துக்களையும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம் .யாழ் .கோட்டையின் பக்கத்தில் உள்ள பண்ணைக் கடலின் நடைபாதையில் உள்ள  பெரிய மரத்தைச் சுற்றிய  வளைவில் 3.30 மணிக்கு உரையாடல் ஆரம்பமாகும் .

ஏற்பாடு -
விதை குழுமம்
(சமூக செயற்ப்பாட்டிற்கான கூட்டிணைவு )

&
யாழின் கரங்கள் .

0 comments:

Post a Comment

Subscribe to RSS Feed Follow me on Twitter!